- Joined
- Jul 10, 2024
- Messages
- 513
அத்தியாயம் 11
நள்ளிரவு மூன்று.
குப்பிற கிடந்தான் விரன் அவன் ஜிம் கம்பளத்தில் படுக்கைக் கொண்டு. வேறெங்கே போயிடுவான் குட்டி குஞ்சனவன் அவனின் பொண்டாட்டியை விட்டு.
அதாவது ஐயாவிற்கு எப்போதுமே முதல் தாரம் ஜிம், வர்க் அவுட் என்ற லொட்டு லொசுக்குகள்தான். சின்ன டிக்கியிடமே பலமுறை சொல்லியாயிற்று சீமாட்டியவள் செகண்ட்டுத்தான் என்று.
விழியோரம் கண்ணீர் உருளைகள் ரெண்டு சத்தமின்றி உருண்டு நாசி வழி ஆணவனின் வாய் தாடையில் முற்று பெற்று கார்ப்பேட்டில் விழுந்தன.
குறுக்கே கிடந்த முழங்கைகளின் மீது தலை சாய்த்திருந்தவனின் விழிகளோ ஏறெடுத்தன அங்கிருந்த தளவாடங்களை. ஒன்றை கூட தம்பதிகள் இருவரும் விட்டு வைத்ததில்ல.
படுக்க போட்டும் ஏறியாயிற்று நிக்க வைத்தும் அடித்தாயிற்று செய்யாத லீலைகளில்லை இருவரும். நாராசம் செய்திடுவார்கள் இருவரும் கொஞ்சுங்கூட கூச்சம் நாச்சமின்றி கலவியில் குதூகலித்து.
வார ஒரு நாள் செண்டர் அடைப்பில் மற்றவர்களுக்கு விடுப்பாயினும் புருஷன் பொஞ்சாதிக்கு பொழப்பே அங்குதான். காமத்தின் அறுபத்தி நான்கு ஆயக்கலைகளையும் ஒவ்வொன்றாய் இப்போதுதான் கற்றுணர ஆரம்பித்திருந்தனர் இருவரும்.
ஆனால், அதற்குள் இப்படியொரு இடி விழும் அவர்களின் வாழ்விழென்று கனவிலும் நினைக்கவில்லை இருவரும். குறிப்பாய், விரன்.
கனவு கண்டு தொலைத்திருந்தான் ஆணவன் ஒன்றுக்கு நான்கைந்து பிள்ளைக் குட்டிகளோடு வாழ்க்கையை ஆண்டு அனுபவித்து போய் சேர வேண்டுமென்று. என்செய்ய அவன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
இருப்பினும், விதி வலியது. படைத்தவன் அறிவான் எல்லாம்.
மிழிகள் மெதுவாய் சொருக தொடங்கின விரன் சிங்கிற்கு. இமைகள் மூட பாரமான மனசோ பழசை அசைப்போட ஆரம்பித்தது.
அவிரன் சிங் குடும்பம் சிட்டியில் கொஞ்சம் பேர் புகழ் கொண்ட குடும்பமே. ஆணவனுக்கு ஏழு வயது இருக்கும் பொழுதிலேயே அவன் அப்பா போய் சேர்ந்தாயிற்று. அம்மா சிங்கள் மதர். அட்ச்சரனுக்கோ அப்போது நான்கு வயது.
அம்மா தமிழ், அப்பா சிங். கண்டதும் மோதல். பின், வந்தது காதல். பணத்தை வட்டிக்கு கொடுக்கும் குடும்பம் திலீப் சிங்கின் பேமிலியாகும். குலத்தொழில் அது அவர்களுக்கு.
கல்யாணத்துக்கு நோ சொன்ன குர்ஜஸ் தாத்தாவோ வாழ வேண்டிய ஒற்றை மகனின் சடலத்தை கண்ட நொடி புத்திரனின் மரணம் அவராலேயே ஏற்பட்டது என்றெண்ணி குற்ற உணர்ச்சி கொண்டார்.
ரேக்கா மற்றும் திலீப்பின் திருமணத்திற்கு தாத்தா தடைப்போட காதலியை பதிவு திருமணம் செய்துக் கொண்டார் விரனின் அப்பா நண்பர்கள் புடைசூழ.
அலைப்பாயுதே ரேஞ்சில் ஜோடிகள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ஒரு மாதம் எப்படியோ சமாளிக்க, அடுத்த மாதம் மாட்டிக் கொண்டனர் ரேக்காவின் தங்கை ஜெயா அக்காவின் தாலியை எதார்ச்சையாக பார்த்திட.
பெண் வீட்டிலோ கலவரம். ஆண் வீட்டிலோ சுயவரம். அத்தை மகள்கள் வரிசை கட்டினர் சொத்து கொண்ட மாமனை கட்டிக்கொண்டு காலாட்டிட ஜம்பமாய் ராணியாட்டம்.
வேறு வழியே இல்லை என்று துணிந்து முடிவெடுத்தார் விரனின் அப்பா கையில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாத போதிலும்.
மனதில் உறுதிக் கொண்டு மனையை விட்டு வெளியேறி, உடன் தாலி கட்டிய மனைவியையும் சேர்த்தழைத்துக் கொண்டு வேறு நகரம் பயணித்தார் திலீப்.
அப்போதைக்கு அவருக்கு கிடைத்த வேலை என்னவோ ஜிம்மொன்றில் மேனஜர் பொறுப்பு மட்டுமே. ஆகவே, தற்சமயத்திற்கு கட்டிய மனைவியை அவரின் நெருங்கிய நண்பனான சோழனின் வீட்டில் தங்க வைத்தார் திலீப்.
மாதங்கள் உருண்டோட ரேக்கா கருத்தரித்தார். ஜிம் தொழிலை நன்றாய் கற்றுக் கொண்ட திலீபனோ தனியொரு ஜிம்மை திறந்தார் தோழன் சோழனின் உதவியோடு.
பிஸ்னஸ் சூப்பராய் போக மகன் அவிரன் பிறந்தான். செல்வம் குமிய ஒன்றுக்கு மூன்று ஜிம்களை திறந்தார் திலீப். சோழனின் மகன் ஹரனும் அவிரனும் ஒரே பள்ளியில் படிக்க அட்ச்சரனும் பிறந்து திலீப் ரேக்கா குடும்பம் முழுமையடைந்திருந்தது அப்போதைக்கு.
யார் கண் பட்டதோ தெரியவில்லை. வியாபார விஷயமாய் வெளியூர் போன திலீப் பாடையில்தான் திரும்பி வந்தார். சாவுக்கு வந்த ரேக்காவின் மாமனார் குர்ஜஸ் தாத்தா மருமகளின் காலில் விழாத குறையாய் கெஞ்சி மகனின் மனைவியையும் குழந்தைகளையும் அவர் வீட்டுக்கு அழைத்து போனார்.
அன்று தொடங்கி ரேக்கா மரித்த கணவரின் பிஸ்னஸ் முதல் மாமனாரின் வட்டி தொழில் முதற்கொண்டு அனைத்தையும் வழி நடத்திட ஆரம்பித்தார் மாமனாரின் வழிக்காட்டலோடு.
திலீப் இருக்கின்ற போதிலே விரனை ஜிம்முக்கு கூட்டி போவதும் அவனுக்கு பயிற்சி கொடுப்பதும் வழக்கமாகும். ஆகவே, அப்பா இல்லாத போதும் அவனின் மனசு ஜிம்மையே நாடியது.
சராசரி மாணவனாக படிப்பை முடித்தவன் அவனுக்கு பிடித்தாற்படி மேற்கல்வியை ஜிம் சார்ந்த துறையிலேயே படித்து பட்டமும் பெற்றான். அப்பாவின் மறைவிற்கு பின் அம்மா ரேக்காவின் திறமையால் இப்போது அவர்களுக்கு ஒரு சிட்டியிலேயே குறைந்தது ஐந்து ஜிம் செண்டர்கள் கொண்டிருக்கும் அளவில் உயர்ந்திருக்கிறார்கள்.
இருப்பினும், விரன் இப்போது குடியாய் கிடக்கும் ஜிம்மானது அவன் சொந்த உழைப்பில் சம்பாரித்து நிறுவியதாகும். ஆகவே, இது அவனுக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஜிம் நடுத்தர அளவில் மேல் மாடியில் மட்டுமே இருந்தாலுமே.
அம்மா மற்ற ஜிம்களை கவனிக்க அவருக்கு உதவியாய் விரன் இருக்கிறான் செண்டர் சார்ந்த விடயங்களில். தாத்தாவின் வட்டி கலெக்ஷனெல்லாம் அட்ச்சரனின் வேலையாகும். கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் தம்பியே படு கெட்டி.
விரனுக்கு உதவி செய்வதிலோ அடுத்தவருக்கு கருணை காட்டுவதிலோ எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், பணங்கொடுத்து அதை திரும்ப வாங்க அல்லோல் படுவதும் பின் அவர்களின் சாபத்தில் உழல்வதும் சுத்தமாய் பிடிக்காது.
அதுவும் தாத்தா காசு விஷயத்தில் செம்ம கறார். தயவு தாட்சணையெல்லாம் பார்த்திட மாட்டார். ஈவிரக்கத்தை கொஞ்சமும் அவரிடத்தில் எதிர்ப்பார்த்திடவே முடியாது.
சொன்ன தேதிக்கு பணம் வரவில்லை என்றால் கொண்டை போட்ட சிங் தாத்தா கோவில்பட்டி கருப்புசாமி கணக்காய் மாறிடுவார்.
ஆகவே, அவிரன் சிங் குலத்தொழிலாகிணும் வட்டி பிஸ்னஸில் முனைப்பு காட்டாது அவனுண்டு அவன் ஜிம்முண்டு என்று செட்டிலாகி விட்டான்.
இருப்பினும், இதுவெல்லாம் அலர்ஜியான விரனுக்கோ பின்னாளில் இதுவும் ஒரு வேலையாகி போனது சின்ன டிக்கியின்பால் ஆணவன் கொண்ட ஆசையினாலே.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
நள்ளிரவு மூன்று.
குப்பிற கிடந்தான் விரன் அவன் ஜிம் கம்பளத்தில் படுக்கைக் கொண்டு. வேறெங்கே போயிடுவான் குட்டி குஞ்சனவன் அவனின் பொண்டாட்டியை விட்டு.
அதாவது ஐயாவிற்கு எப்போதுமே முதல் தாரம் ஜிம், வர்க் அவுட் என்ற லொட்டு லொசுக்குகள்தான். சின்ன டிக்கியிடமே பலமுறை சொல்லியாயிற்று சீமாட்டியவள் செகண்ட்டுத்தான் என்று.
விழியோரம் கண்ணீர் உருளைகள் ரெண்டு சத்தமின்றி உருண்டு நாசி வழி ஆணவனின் வாய் தாடையில் முற்று பெற்று கார்ப்பேட்டில் விழுந்தன.
குறுக்கே கிடந்த முழங்கைகளின் மீது தலை சாய்த்திருந்தவனின் விழிகளோ ஏறெடுத்தன அங்கிருந்த தளவாடங்களை. ஒன்றை கூட தம்பதிகள் இருவரும் விட்டு வைத்ததில்ல.
படுக்க போட்டும் ஏறியாயிற்று நிக்க வைத்தும் அடித்தாயிற்று செய்யாத லீலைகளில்லை இருவரும். நாராசம் செய்திடுவார்கள் இருவரும் கொஞ்சுங்கூட கூச்சம் நாச்சமின்றி கலவியில் குதூகலித்து.
வார ஒரு நாள் செண்டர் அடைப்பில் மற்றவர்களுக்கு விடுப்பாயினும் புருஷன் பொஞ்சாதிக்கு பொழப்பே அங்குதான். காமத்தின் அறுபத்தி நான்கு ஆயக்கலைகளையும் ஒவ்வொன்றாய் இப்போதுதான் கற்றுணர ஆரம்பித்திருந்தனர் இருவரும்.
ஆனால், அதற்குள் இப்படியொரு இடி விழும் அவர்களின் வாழ்விழென்று கனவிலும் நினைக்கவில்லை இருவரும். குறிப்பாய், விரன்.
கனவு கண்டு தொலைத்திருந்தான் ஆணவன் ஒன்றுக்கு நான்கைந்து பிள்ளைக் குட்டிகளோடு வாழ்க்கையை ஆண்டு அனுபவித்து போய் சேர வேண்டுமென்று. என்செய்ய அவன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
இருப்பினும், விதி வலியது. படைத்தவன் அறிவான் எல்லாம்.
மிழிகள் மெதுவாய் சொருக தொடங்கின விரன் சிங்கிற்கு. இமைகள் மூட பாரமான மனசோ பழசை அசைப்போட ஆரம்பித்தது.
அவிரன் சிங் குடும்பம் சிட்டியில் கொஞ்சம் பேர் புகழ் கொண்ட குடும்பமே. ஆணவனுக்கு ஏழு வயது இருக்கும் பொழுதிலேயே அவன் அப்பா போய் சேர்ந்தாயிற்று. அம்மா சிங்கள் மதர். அட்ச்சரனுக்கோ அப்போது நான்கு வயது.
அம்மா தமிழ், அப்பா சிங். கண்டதும் மோதல். பின், வந்தது காதல். பணத்தை வட்டிக்கு கொடுக்கும் குடும்பம் திலீப் சிங்கின் பேமிலியாகும். குலத்தொழில் அது அவர்களுக்கு.
கல்யாணத்துக்கு நோ சொன்ன குர்ஜஸ் தாத்தாவோ வாழ வேண்டிய ஒற்றை மகனின் சடலத்தை கண்ட நொடி புத்திரனின் மரணம் அவராலேயே ஏற்பட்டது என்றெண்ணி குற்ற உணர்ச்சி கொண்டார்.
ரேக்கா மற்றும் திலீப்பின் திருமணத்திற்கு தாத்தா தடைப்போட காதலியை பதிவு திருமணம் செய்துக் கொண்டார் விரனின் அப்பா நண்பர்கள் புடைசூழ.
அலைப்பாயுதே ரேஞ்சில் ஜோடிகள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ஒரு மாதம் எப்படியோ சமாளிக்க, அடுத்த மாதம் மாட்டிக் கொண்டனர் ரேக்காவின் தங்கை ஜெயா அக்காவின் தாலியை எதார்ச்சையாக பார்த்திட.
பெண் வீட்டிலோ கலவரம். ஆண் வீட்டிலோ சுயவரம். அத்தை மகள்கள் வரிசை கட்டினர் சொத்து கொண்ட மாமனை கட்டிக்கொண்டு காலாட்டிட ஜம்பமாய் ராணியாட்டம்.
வேறு வழியே இல்லை என்று துணிந்து முடிவெடுத்தார் விரனின் அப்பா கையில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாத போதிலும்.
மனதில் உறுதிக் கொண்டு மனையை விட்டு வெளியேறி, உடன் தாலி கட்டிய மனைவியையும் சேர்த்தழைத்துக் கொண்டு வேறு நகரம் பயணித்தார் திலீப்.
அப்போதைக்கு அவருக்கு கிடைத்த வேலை என்னவோ ஜிம்மொன்றில் மேனஜர் பொறுப்பு மட்டுமே. ஆகவே, தற்சமயத்திற்கு கட்டிய மனைவியை அவரின் நெருங்கிய நண்பனான சோழனின் வீட்டில் தங்க வைத்தார் திலீப்.
மாதங்கள் உருண்டோட ரேக்கா கருத்தரித்தார். ஜிம் தொழிலை நன்றாய் கற்றுக் கொண்ட திலீபனோ தனியொரு ஜிம்மை திறந்தார் தோழன் சோழனின் உதவியோடு.
பிஸ்னஸ் சூப்பராய் போக மகன் அவிரன் பிறந்தான். செல்வம் குமிய ஒன்றுக்கு மூன்று ஜிம்களை திறந்தார் திலீப். சோழனின் மகன் ஹரனும் அவிரனும் ஒரே பள்ளியில் படிக்க அட்ச்சரனும் பிறந்து திலீப் ரேக்கா குடும்பம் முழுமையடைந்திருந்தது அப்போதைக்கு.
யார் கண் பட்டதோ தெரியவில்லை. வியாபார விஷயமாய் வெளியூர் போன திலீப் பாடையில்தான் திரும்பி வந்தார். சாவுக்கு வந்த ரேக்காவின் மாமனார் குர்ஜஸ் தாத்தா மருமகளின் காலில் விழாத குறையாய் கெஞ்சி மகனின் மனைவியையும் குழந்தைகளையும் அவர் வீட்டுக்கு அழைத்து போனார்.
அன்று தொடங்கி ரேக்கா மரித்த கணவரின் பிஸ்னஸ் முதல் மாமனாரின் வட்டி தொழில் முதற்கொண்டு அனைத்தையும் வழி நடத்திட ஆரம்பித்தார் மாமனாரின் வழிக்காட்டலோடு.
திலீப் இருக்கின்ற போதிலே விரனை ஜிம்முக்கு கூட்டி போவதும் அவனுக்கு பயிற்சி கொடுப்பதும் வழக்கமாகும். ஆகவே, அப்பா இல்லாத போதும் அவனின் மனசு ஜிம்மையே நாடியது.
சராசரி மாணவனாக படிப்பை முடித்தவன் அவனுக்கு பிடித்தாற்படி மேற்கல்வியை ஜிம் சார்ந்த துறையிலேயே படித்து பட்டமும் பெற்றான். அப்பாவின் மறைவிற்கு பின் அம்மா ரேக்காவின் திறமையால் இப்போது அவர்களுக்கு ஒரு சிட்டியிலேயே குறைந்தது ஐந்து ஜிம் செண்டர்கள் கொண்டிருக்கும் அளவில் உயர்ந்திருக்கிறார்கள்.
இருப்பினும், விரன் இப்போது குடியாய் கிடக்கும் ஜிம்மானது அவன் சொந்த உழைப்பில் சம்பாரித்து நிறுவியதாகும். ஆகவே, இது அவனுக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஜிம் நடுத்தர அளவில் மேல் மாடியில் மட்டுமே இருந்தாலுமே.
அம்மா மற்ற ஜிம்களை கவனிக்க அவருக்கு உதவியாய் விரன் இருக்கிறான் செண்டர் சார்ந்த விடயங்களில். தாத்தாவின் வட்டி கலெக்ஷனெல்லாம் அட்ச்சரனின் வேலையாகும். கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் தம்பியே படு கெட்டி.
விரனுக்கு உதவி செய்வதிலோ அடுத்தவருக்கு கருணை காட்டுவதிலோ எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், பணங்கொடுத்து அதை திரும்ப வாங்க அல்லோல் படுவதும் பின் அவர்களின் சாபத்தில் உழல்வதும் சுத்தமாய் பிடிக்காது.
அதுவும் தாத்தா காசு விஷயத்தில் செம்ம கறார். தயவு தாட்சணையெல்லாம் பார்த்திட மாட்டார். ஈவிரக்கத்தை கொஞ்சமும் அவரிடத்தில் எதிர்ப்பார்த்திடவே முடியாது.
சொன்ன தேதிக்கு பணம் வரவில்லை என்றால் கொண்டை போட்ட சிங் தாத்தா கோவில்பட்டி கருப்புசாமி கணக்காய் மாறிடுவார்.
ஆகவே, அவிரன் சிங் குலத்தொழிலாகிணும் வட்டி பிஸ்னஸில் முனைப்பு காட்டாது அவனுண்டு அவன் ஜிம்முண்டு என்று செட்டிலாகி விட்டான்.
இருப்பினும், இதுவெல்லாம் அலர்ஜியான விரனுக்கோ பின்னாளில் இதுவும் ஒரு வேலையாகி போனது சின்ன டிக்கியின்பால் ஆணவன் கொண்ட ஆசையினாலே.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.