What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
513
அத்தியாயம் 45

காதலை சொல்லாமலே சொல்லி கரம் பிடித்தவன் இன்றைக்கு இப்படி பாதியில் தவிக்க விட்டு போக துடிக்கும் நிலைக்கு காரணம் அவனின் ஆண்மையின்மையே என்று நினைத்த சின்ன டிக்கியோ அழுது புரண்டினாள் பூஜை அறையில்.

மனக்குறைகளை வேறெங்கே சொல்லிட முடியும் கடவுளை தாண்டி. அவனை தவிர உதவிடவும் இரக்கம் காட்டிடவும் வேறெவரால் முடியும். காலை ஒன்பதுக்கு ஆரம்பித்த கண்ணாட்டியின் ஒப்பாரியை தற்சமயத்திற்கு நிறுத்திட வைத்தான் தபால்காரன்.

முகத்தை நீரடித்து கழுவிக் கொண்டவளோ வெளியில் சென்று கையிலெடுத்தாள் வந்திருந்த வெள்ளை கவர் கடித உரையை கையில். அதன் முகப்பு முகவரியை பார்த்தவளுக்கோ நெஞ்சு பக்பக்கென்றது.

பொறுமையின்றி அரக்க பறக்க பிரித்தாள் நிழலிகா கடிதமை. ஆடிப்போனாள் வக்கீல் நோட்டிஸ் வந்திருக்க விவாகரத்து விடயமாய்.

இடி விழுத்தாற்போல நின்றவளின் அம்பகங்களோ கண்ணீரை வழிய விட்டன இதயம் பிளவு கொண்டு நிற்க.

நேற்று வரை வெறும் வாய் வார்த்தையில் சொல்லிக் கொண்டிருக்கிறான் விரன் என்று எண்ணியிருந்தவளின் அலட்சியமோ இன்று அணங்கவளின் அகத்தை கூறு போட்டு நின்றது நோட்டிஸ் நங்கையின் வெளிறிய முகம் பார்த்து கொக்கலிக்க.

ஏளனமாய் உணர்ந்தாள் சின்ன டிக்கியவள் எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறாள் என்று, நேற்றிரவு கூட விரன் இப்படியான சங்கதி ஒன்று நடக்கவிருக்கும் விபரீதம் அறியாது.

குடும்பம் என்றால் நான்கு சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அனுசரித்தும் விட்டுக்கொடுத்தும் போவதுதான் வாழ்க்கை, தனிமனித சுயத்தை இழக்காது.

பிடித்தவர்களுக்காக சில விடயங்களை மாற்றிக்கொள்வதோ அல்லது அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் கூட ஒருவகையான காதலே. பெண்ணியம், ஆணியம் என்ற எந் ஆணியும் இதில் இல்லை.

எச்சி துப்பி காதல் வளர்த்த கூட்டமும் உண்டு. முறைத்து பார்த்ததற்கே முறுக்கிக் கொண்டு போன காதல் உண்டு. ஆகவே, ஆளாளுக்கு அவரவர் விருப்பு வெறுப்பு.

எப்படி காமம் வெட்கமறியதோ, அதேபோல் காதல் கண்ணை மறைத்து கபாலம் மழுங்கிய கேணையர்களை உருவாக்க தவறுவதில்லை.

சின்ன டிக்கியை பொறுத்தமட்டில் விரனை அப்படியே ஏற்றுக் கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவனின் கோபமாகட்டும் தாபமாகட்டும் எல்லாவற்றையும் அவளுக்குள் தாங்கி அளவில்லா அன்பை மட்டுமே அவனுக்கு பதிலாய் தந்தாள் தாரமவள்.

விரன் கூட அப்படித்தான். மற்றவர்கள் சிரிக்க மானத்தை காற்றில் பறக்க விட்ட அறிவு கொழுந்தைத்தான் ஈகோ பார்க்காது மேடையேறி கரமிழுத்து கட்டிக்கொண்டான்.

அதனால்தான், அவன் பாடு அவனோடு போகட்டும் என்றெண்ணியவனோ துணைவியவளாவது நல்வாழ்க்கை வாழட்டும் என்று அளவற்ற துன்பங்களை அவளுக்கு கொடுத்து அவனுமே நரக வேதனைக் கொண்டிருக்கிறான்.

சின்ன டிக்கியவள் கணவனின்பால் கொண்ட நேசத்தை விரன் நோட்டிஸ் கொண்டு அளந்து பார்க்க, சினங்கொண்ட சிங்காரியோ எக்காரணத்தை கொண்டும் அவன் இழுப்பிற்கு இனி இணங்க போவதில்லை என்ற முடிவிற்கு வந்தாள்.

கட்டில் சமாசாரத்தை நிழலிகா இதில் சேர்த்துக் கொள்ளவே இல்லை. விரன் கேட்பதை கொடுக்க கூடாது என்பதை தாண்டி கொடுக்க முடியா நிலையில் அவளையே சூழ்நிலை கைதியாக்கி அவன் முன் நிறுத்திட எண்ணங்கொண்டாள்.

கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாய் நுழைந்தாள் சின்ன டிக்கி வீட்டுக்குள். வேலைக்காரியிடம் வெளியில் போவதாய் சொல்லியவளோ எடுத்து மாட்டினாள் தோளில் கைப்பையை.

போனை கையிலெடுத்தவளோ அழைத்தாள் பக்கமிருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றை. வேண்டிய விபரங்கள் பெற்று புக் செய்தால் கிரேப் காரை. கார் வர அதிலேறி பயணம் கொண்டாள் தலைமகளவள் உறுதியான மனநிலையோடு.

ஒரு மணி நேர கார் பயணத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் போனவளோ போஸ்ட் ஒன்றை பதிவு செய்து போனை சுவிட்ச் ஆப் செய்தாள்.

நிழலிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு இப்படித்தான் இருந்தது.

''We should learn loyalty from dogs. But we learned positions!''
(நாய்களிடமிருந்து விசுவாசத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நாமோ உடலுறவுக்கான நிலைகளை மட்டுமே கற்றுக்கொண்டிருக்கிறோம்!)

I'm glad that I have the loyalty and hope others too! However, some are need to be teaches to!''
(நான் விசுவாசமா இருக்கறதே நினைச்சு நான் ரொம்பவே பெருமைப்படறேன்! மத்தவங்களும் அப்படி இருக்கனுன்னுதான் நான் நம்பறேன்! இருந்தாலும், சிலருக்கு விசுவாசத்தை கத்துக் கொடுத்தே ஆகணும்!)

ஜிம்மிலிருந்த நாயகனோ அம்மணியின் பதிவுகளை பார்த்து பேயறைந்தவன் போலானான். உண்மையேதும் தெரிந்து விட்டதா என்ற கலக்கம் வேறு அடிவயிற்றை கலக்கியது ஆணவனுக்கு.

நிழலிகாவாய் வேறு முடிவெடுக்கும் முன் அவளை தடுத்திட வேண்டுமென்று பதறியவனோ ஓடினான் பைக்கை அழுத்திக் கொண்டு வீட்டுக்கு.

போகும் வழியில் பலமுறை அழைத்தான் விரன் பெருமாட்டியவளுக்கு. அடைத்து போட்ட தலைமைகளின் போனோ அவன் அழைப்பில் சிக்கிடவேயில்லை. ஆட்டங்கண்டது விரனுக்கு உச்சி முதல் பாதம் வரை.

எங்கே வசமாய் சிக்கிக் கொள்வானோ என்ற அச்சம் போய், அவசரப்புத்திக்காரியவள் விபரீதமான முடிவெதையும் எடுத்து தொலைத்திடுவாளோ என்ற பயமே அவனுக்கு.

சண்டை கொண்டு அழுதிடுவாள் என்று நினைத்திருப்பவள் திடிரென்று காண்டாகி அநீதிக்கு போர்க்கொடி தூக்கினால், அவ்வளவுதான் ஊர் மெச்சும் புருஷ லட்சணம் ஆண்மகனவனை சந்தி சிரிக்க வைத்திடுமென்று அல்ட்டி புடிங்கியது விரனுக்கு.

சின்ன டிக்கியின் இன்ஸ்டாகிராம் பதிவு அவனை நிம்மதியற்றவனாக்கியது. பைக்கை முறுக்கிய ஒவ்வொரு சிக்னலிலும் ஆளனின் சிந்தைக்குள் கலவரம் கலைக்கட்டியது.

அடித்து பிடித்து வீடு வந்து சேர்ந்தான் விரன். பொண்டாட்டியவள் அங்கில்லை என்றறிந்த நொடி உறைந்து போனான்.

முழுப்பூசணிக்காயை எத்தனை நாள்தான் சோற்றில் மறைத்திட முடியும். திருட்டு பூனையும் எப்படித்தான் சிக்கிடாமல் டிமிக்கி கொடுத்தப்படி பால்காரியை ஏமாற்றிட முடியும்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 45
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top