What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

anti heroine

  1. KD

    அத்தியாயம்: 106

    அத்தியாயம் நூற்றி ஆறு சாதாரண இறப்பென்றாலே கூறு போட சொல்லும் போலீஸ், கொலை வழக்கை சும்மாவா விடும். குத்திக் குதறியெடுத்து விட்டார்கள் ரீசனின் உடலை போஸ்ட் மார்ட்டம் என்ற பெயரில். குஞ்சரி எவ்வளவோ கெஞ்சினாள் கதறினாள். அவன் வலி தாங்க மாட்டான் என்றாள். ஆனால், நிஜத்தில் மரணித்தவனுக்கு உணர்ச்சிகள்...
  2. KD

    அத்தியாயம்: 105

    அத்தியாயம் 105 இறப்பென்பது சரீரத்துக்கு மட்டுமே சாத்தியப்பட்டதாகும். நாம் நம்மவர்களை மறக்கும் வரையில் அவர்களின் நினைவு நம்மில் இருக்கும் வரை அவர்களுக்கு என்றைக்குமே அழிவில்லை. இனிமையான பிறப்பு தனிமையான இறப்பு இதுவே வாழ்க்கை. ஒரேடியாய் போய் சேர்ந்தவனுக்கு இனி எவ்வித கவலையும் இல்லை. ஆனால்...
  3. KD

    அத்தியாயம்: 104

    அத்தியாயம் 104 மனம் விரும்பியவனை ஆசை ஆசையாய் காதலித்து கரம் பிடித்தவள் அவனின் நிழலை வேறொருத்தி கண்டால் கூட பார்த்தவளை சுட்டெரித்திடும் அளவிலான காதலைக் கொண்ட குஞ்சரிக்கோ முதல் முறை உள்ளுக்குள் அச்சம் நிலவியது. “ரீசன்! ரீசன்! என்ன பாருடா! டேய்! கண்ணத் திறடா!” என்ற குஞ்சரியோ கத்தினாள் கதறினாள்...
  4. KD

    அத்தியாயம்: 103

    அத்தியாயம் 103 களேபரம் கொண்ட அறையை நோக்கி வந்தாள் குஞ்சரி அவளின் நவீன வீல் சேர் கொண்டு. “ரீசன்!” என்றலறிய குஞ்சரியோ ரத்தமும் சகதியுமாய் உடலில் காயங்கள் கொண்டு மஞ்சத்தில் நின்றவனை பார்த்து வெம்பினாள். “ஆஹ்... ஹ்ஹ்... கு... குஞ்... ஆஹ்ஹ்...” என்ற ரீசனின் கால்களோ சடீரென்று வலுவிழந்து...
  5. KD

    அத்தியாயம்: 102

    அத்தியாயம் 102 மணி விடியற்காலை நான்கு முப்பது. சத்தம் போட்டது பேபி சீட்டரின் கைகடிகாரம். ஆணவன் வழக்கமாய் எழும் நேரமது. ஜிம்மெல்லாம் போகும் ரகமில்லை ப்ரீதன். இருந்தும் வீட்டிலேயே ட்ரெட்மில்லில் வேர்த்து விறுவிறுக்க ஓடிடுவான். ஆனால், கல்யாணமான கொஞ்ச நாட்களாகவே இந்த நான்கரை மணி அலாரம் என்னவோ...
  6. KD

    அத்தியாயம்: 101

    அத்தியாயம் 101 மணி நான்காக லேசாய் தூக்கம் கலைந்தது ப்ரீதனின் தம்பிராட்டிக்கு. மிழிகளை கசக்கி விழிகளை விரித்தவள் பக்கத்தில் பிக் பாஸை காணாது அறையைச் சுற்றி தேடினாள் தாலி கட்டியவனை. “ப்ரீதன்... ப்ரீதன்... வாஷ்ரூம்லையா இருக்கீங்க? ப்ரீதன்...” என்றவளோ அழைப்பின் ஊடே கணவனை ஏலம் போட்டும்...
  7. KD

    அத்தியாயம்: 100

    அத்தியாயம் 100 துயில் திருட போகும் இரவினை பால்கனியில் நின்றப்படி ரசித்திருந்தாள் மாயோள் அவள். பஞ்சு மிட்டாய் கலர் சேலையில் சும்மா சோக்காய் இருந்தாள் அவனின் இயமானியவள். இடை தொடாது மேல் முதுகின் பாதியிலான கோர குழலோ தின்று செரிக்கா பாம்பாக அசைவுக் கொண்டது. காரிகையின் இருகரங்களையும் நிறைத்திருந்த...
  8. KD

    அத்தியாயம்: 99

    அத்தியாயம் 99 பைக் எங்கெங்கோ போய் கடைசியில் பீச்சில் வந்து நின்றது. விடிய இன்னும் மூன்று மணி நேரங்கள் இருக்க காலரா நடக்க ஆரம்பித்தனர் ப்ரீதனும் விசாவும். ''விசா..'' என்றவன் அழைத்து கண்ணால் சைகை செய்தான் ஈரமணலை பார்த்திட சொல்லி சுந்தரியவளை. பெண்ணவளும் தலைகுனிந்து பார்க்க அங்கே இரு குட்டி...
  9. KD

    அத்தியாயம்: 98

    அத்தியாயம் 98 மடித்த துணிமணிகளை திறந்திருந்த ட்ரவலிங் பேக்குக்குள் அவசர அவசரமாய் அடுக்கிக் கொண்டிருந்தாள் விசா. ப்ரீதனோ சத்தமின்றி நுழைந்தான் அறைக்குள். அவனை ஏறெடுத்தவளோ எதையோ எதிர்பார்க்க, ஆணவனோ குனிந்த தலையோடு அமைதியாகவே நின்றிருந்தான். பெண்டு அவளோ கண்ணிலிருந்து துளிர்த்த கண்ணீர் துளியை...
  10. KD

    அத்தியாயம்: 97

    அத்தியாயம் 97 மணி விடியற்காலை ஐந்து. அழுது ஆர்ப்பாட்டம் செய்த குஞ்சரியை இப்போதுதான் ஒருவழியாய் உறங்க வைத்திருந்தான் ரீசன். அலைபேசியோ சத்தமில்லா வெளிச்சம் கொண்டது. அதை கையிலெடுத்தவனோ வக்கீல் ஆச்சாரியரின் வாட்ஸ் ஆப்பிற்கு கொஞ்சமும் யோசிக்காது பதில் அனுப்பினான். அதாவது மூத்தவன் மற்றும்...
  11. KD

    அத்தியாயம்: 96

    அத்தியாயம் 96 இரவு பத்து. இருட்டிய ரோட்டில் ஒப்புக்கு முச்சந்தியில் ஒரு விளக்கு. மங்கிய மஞ்சள் கண்ணுக்கு எட்டும் வரை மயக்கும் வெளிச்சத்தை பரப்பியிருந்தது. ப்ரீதனோ பைக்கை சார பாம்பாட்டம் வளைத்து நெளித்து ஓடினான் சும்மாவே. விசாவோ ஹெல்மட்டை கழட்டி கூந்தலை மொத்தமாய் வாரி ஒளித்தாள் கழுத்தோர...
  12. KD

    அத்தியாயம்: 95

    அத்தியாயம் 95 மண்டபம் கோலாகலம் கொண்டிருந்தது. இளம் தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் ஃபங்சன் அது. குறிப்பாய், மகளிருக்கான நிகழ்வது. ஆண்டுதோறும் மிக விமரிசையாகவே நடத்திடுவார்கள் எஸ்.எம்.ஈ. எனும் நிறுவனம் தொழில்முனைவர்களுக்கான சிறப்பு விருது விழா அதை. அப்ளிகேஷன் போட வேண்டியது மட்டும்தான்...
  13. KD

    அத்தியாயம்: 94

    அத்தியாயம் 94 ''ரீசன்..'' பரீட்சியமான குரலொன்று குஞ்சரி புருஷனின் காதில் விழுந்தது சிறு தழுதழுப்போடு. முகத்தை இடக்கையால் மூடி அமர்ந்திருந்த ரீசனோ தலை தூக்கினான். ''எப்.. எப்படி..'' அடித்தொண்டையில் பாதி வார்த்தைகள் முள்ளாய் சிக்கிக் கிடக்க விசாவின் கண்ணீர் ததும்பிய விழிகளோ கொட்டிவிட்டன...
  14. KD

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 93 சிறைவாசம் கொண்ட ரீசனின் தலையோ தூக்குக்கு போகாது தப்பித்தது அவசர பிரிவில் உயிருக்கு போராடியவனின் உயிர் ஊசலாடாது சீராக. வீர்ரோ மதுக்கூட வழக்கிற்காய் வெளியூர் போயிருந்த ரீசனை தேடி இறுதியில் கண்டுக் கொண்டான் நடந்திருந்த விபத்தையும் அதில் சிக்கியிருந்த ரீசனின் நிலையையும். சாவானா...
  15. KD

    அத்தியாயம்: 92

    அத்தியாயம் 92 பொழுது புலர்ந்தது. குருவிகள் கீச்சில் கொண்டன மின்சார சரடுகளின் மீதமர்ந்து. ஜன்னல் திரைசீலையோ மந்தமான வானிலையின் ஜில்லென்ற குளிர் காற்றில் மெதுவாய் ஆட ஆரம்பித்தது. கீழ் தளத்திலோ சுப்ரபாதம் கேட்டது. குஞ்சரியைக் கவனித்துக் கொள்ளத்தான் கேர் டெக்கரே தவிர வீட்டு வேலையை...
  16. KD

    அத்தியாயம்: 91

    அத்தியாயம் 91 ஆறு மாதங்களுக்கு முன் குஞ்சரியின் வாழ்க்கையை சீரழித்த மனித ஓநாயோ கம்பீரமாய் நின்றுக் கொண்டிருந்தது கோதையவள் முன். ''நீயா!!!'' என்று அதிர்ச்சி விலகாது அலறினாள் குஞ்சரியவள் அந்த ஒரு நிமிடத்தில் மண்டை வலியெல்லாம் காணாமல் போக. ''நானேதான் மயூரி!'' என்றவனின் வன்ம புன்னகையில்...
  17. KD

    அத்தியாயம்: 90

    அத்தியாயம் 90 பிரகாசித்திருந்த களங்கனை சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி ஜன்னலோர திரைசீலையை விலக்கியப்படி ரசித்திருந்தாள் குஞ்சரி. ரீசன் எப்போது வருவான் என்றிருந்தது அவளுக்கு. குட்டி பையனோ அம்மாவைப் போலவே அப்பாவை தேடி மெல்லமாய் அசைய வருடிக் கொடுத்தாள் கோமகளவள் மேடுக்கொண்ட வயிறை. ''நீ மட்டும்...
  18. KD

    அத்தியாயம்: 89

    அத்தியாயம் 89 நல்லவன் தீயவனெல்லலாம் சூழ்நிலையையே பொறுத்தே அமையும். ரீசனின் தற்போதைய மாற்றமெல்லாம் அவனை அடுத்தவர் பார்வைக்கு மோசமானவனாகவே காட்டிடும். வேறென்னே செய்ய இயலும் அவனால், குஞ்சரியின் மீது அளப்பரிய காதல் கொண்டு மொத்த பாவப்பழியையும் அவன் தலையில் போட்டுக் கொள்வதை தவிர. அமராவின் மீது...
  19. KD

    அத்தியாயம்: 88

    அத்தியாயம் 88 காலாகாலத்தில் கல்யாணம் செய்திருக்க வேண்டிய ப்ரீதனோ இப்போதுதான் ஒரு பெண்ணை டாவடிக்கவே ஆரம்பித்திருக்க, அக்கா அமராவோ சீக்கிரமாகவே அவன் விசாவோடு ஜோடி சேர்ந்திட விரும்பினாள். தம்பி கேட்டதற்கிணங்கி விசாவோடு வெறும் சாதாரண அளவல்களே கொண்ட தமக்கையவள் பின்னாளில் குஞ்சரி அவளுக்கு இழைத்த...
  20. KD

    அத்தியாயம்: 87

    அத்தியாயம் 87 ரீசன் செய்யாத குற்றத்திற்காய் சிறைவாசம் கொள்ள, மனையில் கிடந்த மணவாட்டியோ கணவனவன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள். பாவம் குஞ்சரியவள் கனவிலும் நினைக்கவில்லை அந்திகையவளின் காத்திருப்பிற்கு பதிலாய் வரப்போறவன் மனம் விரும்பி தொட்டவனல்ல மானத்தை கூறுப்போட்ட கெட்டவனென்று. வழக்கு...
Top