Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

#படித்ததில் பிடித்தது
ஒரு குட்டிக் கதை!
புத்திசாலி!!!
மனைவியா? புருஷனா?
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து,
" என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்..
எப்பதான் நான் மந்திரி பொண்டாட்டின்னு சொல்ரது..? உடனே சி எம் ஐப் பார்த்து, அதான் நம்ம தலைவரைப் பார்த்து, மந்திரியாகிற வேலையைப் பாருங்க..
"அதுவும் நீங்க போலீஸ் மந்திரியாதான் ஆகணும்" என்றாள் மனைவி..
"அதென்ன வேற துறை மந்திரியா ஆகக் கூடாதா ? கேட்டார் எம்.எல்.ஏ...
முடியாது...நீங்க போலீஸ் மந்திரியாகத்தான் ஆகனும், ஏன்னா என் பிரண்ட்ஸ் பல பேர் இன்ஸ்பெக்டர் மனைவி, எஸ்.பி மனைவி, கலெக்டர் மனைவின்னு பெருமை பட்டுக்கொள்கிறார்கள்.
நான் போலீஸ் மந்திரியின் மனைவின்னு ஆயிட்டா...அதான் எனக்கு கெத்து...
சரி...சரி... கிளம்புங்க உடனே ! தலைவரைப் பார்த்து போலீஸ் மந்திரி ஆகுற வேலையைப் பாருங்க... என விரட்ட, சட்ட மன்ற உறுப்பினர் முதல்வரைச் சந்திக்க முதல்வரின் வீட்டிற்கு வருகிறார்...
முதல்வர் தன் வீட்டில் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருக்கையில் எம்.எல்.ஏ வந்துள்ள செய்தியை சொல்கிறார் உதவியாளர்.
"ஜாதி ஓட்டிற்காக உங்க எல்லாரோட பேச்சைக் கேட்டு இவனை எம்.எல்.ஏ ஆகிட்டு நான் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சமா நஞ்சமா... சரி அவனை உள்ளே வரச்சொல்" என்றார் முதல்வர் வேதனையுடன்.
"வணக்கம் தலைவரே! நான் வந்த நேரம் எல்லாருமே இருக்காங்க.."
" என்ன விஷயம் ? "
கேட்டார் முதல்வர்..
" தலைவரே ! நேரா விஷயத்துக்கு வரேன். என்ன பண்ணுவிங்களோ, ஏது பண்ணுவிங்களோ, எனக்குத் தெரியாது, என்னை உடனடியா போலீஸ் மந்திரியா ஆக்கிடுங்க" என்றார்...
கோபம் கொண்ட முகத்துடன் பொதுச் செயலாளரைப் பார்த்து முறைத்தார் முதல்வர்.
உடனே பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ விடம் அவருடைய பொது அறிவுத்திறன் பற்றி அவருக்கு உணர்த்த ஒரு கேள்வி கேட்டார்.
"ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்றவன் யார்?" எனக் கேட்டார்.
பொதுச் செயலாளர் அருகில் வந்து " அடுத்த வாரம் இதே நாளில் வந்து சொல்கிறேன்." என்று சொல்லி முதல்வருக்கு வணக்கம் சொல்லி கிளம்பினார் எம்.எல்.ஏ.
இதைக் கண்ட முதல்வர், அவன் கோபமா போயிட்டான் போல என்று சொன்னார்.
வீட்டிற்கு வந்த எம்.எல்.ஏ மனைவியிடம், என்ன சாப்பாடு என்று கேட்டார்.
" முதல்ல போன விஷயத்தச் சொல்லுங்க" என்றாள்.
"ஏறக்குறைய முடிவு ஆன மாதிரிதான். அடுத்த வாரம் அறிவிப்பு வரும்."
"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? எனக் கேட்டாள் மனைவி.
" இல்லன்னா எடுத்த உடனேயே ஒரு கொலை கேசை எங்கிட்ட ஒப்படைப்பாங்களா ?
யாரோ ஆப்ரகாம் லிங்கனாம், எவனோ போட்டுத் தள்ளிட்டு இருக்கான், பெரிய இடம் போல, அதான் நியூஸ் இன்னும் வெளியில் வரலே. நான் ஒரு வாரம் டைம் கேட்டுகிட்டு வந்திருக்கேன்.
அந்த ஆப்ரகாம் லிங்கனை கொலை செய்தவனை கண்டுபிடுச்சி அவங்க முன்னாடி ஒப்படைத்து, நான் போலீஸ் மந்திரின்னு எல்லோருக்கும் காட்டுறேன்" என்று சொல்ல,
"உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியலேன்னா யாரையாவது சும்மாவாவது ஒத்துக்க வச்சிருங்க, அதுக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்லை!!" என்றாள் மனைவி
படித்தவுடன் வாய்விட்டு சிரித்திடுங்கள்.
Author: Admin 1
Article Title: யார் புத்திசாலி?
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யார் புத்திசாலி?
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.